Signed in as:
filler@godaddy.com
உங்களால் இந்தப் பதிவை - இந்த வசனத்தைப் - படிக்க இயல்கிறதா?
இயலும் இசையும் நாடகமும் இயைந்து வளர்ந்த முதுபெரும் மொழியாம் தமிழை அறிந்திருப்பதால் உங்களால் அது இயல்கிறது. நமக்குப் பிறகு இனிவரும் தலைமுறையிடத்தும் தமிழ் தழைக்க வேண்டும் - நிலைக்க வேண்டும் - என்றால் தேசங்கள் கடந்து செழுந்தமிழ் தொடர்ந்து ஒலிக்க வேண்டும்.
அந்த இலக்கை நோக்கிய சிறுதுளி முயற்சியாகத் தமிழ்த்தாய் அந்தாதிப் பாடல்களை இசைக்காணொளிகளாகக் கொண்டு வரும் வேலைத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு உங்கள் உதவி தேவைப்படுகிறது.
சொல் நயமும் பொருட்செறிவும் அணி அழகும் துலங்கும்படி பாவலர் தவ சஜிதரன் புனைந்திருக்கும் போற்றிப்பாடல் தமிழ்த்தாய் அந்தாதி ஆகும்.
முத்தமிழில் முதலாவதான இயற்றமிழில் அமைந்த அந்தாதி இப்போது இசையாகவும் நாடகமாகவும் முகிழ இருக்கிறது.
அந்தாதியின் 30 பாடல்களை இவ்விரண்டாகக் கோத்து மொத்தம் 15 காணொளிகள் வெளியிடப்பட உள்ளன. இதற்கு நிதியுதவி நல்குவதன் மூலம் நீங்கள் 'தமிழ்த்தாய் அந்தாதிக் காப்பாளர்' ஆக வர முடியும்.
பெரும் நிதிப் பின்புலம் எதுவுமில்லாமல் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது – தமிழ்த்தாயின் கருணை எமக்கு வல்லமை சேர்த்து வழிகாட்டும் என்ற நம்பிக்கையுடன்.
£5 இலிருந்து £500 வரை உங்களால் இயன்ற தொகையை நீங்கள் காணொளி உருவாக்கத்துக்கு நல்க முடியும். மொழியகம் வலைத்தளம் உள்ளடங்கலான இடங்களில் உங்கள் பெயர் நன்றியறிதலுடன் வெளியிடப்படும்.
பாவலர் தவ சஜிதரன்
சதீஷ் ராம்தாஸ்
காவ்யா சத்யதாஸ்
VM திலோஜன்
அந்தாதிக் காணொளி உருவாக்கத்துக்கு £50 அளிக்கின்றீர்கள்.
அந்தாதிக் காணொளி உருவாக்கத்துக்கு £100 அளிக்கின்றீர்கள்.
அந்தாதிக் காணொளியொன்றின் பெரும்பகுதிச் செலவை £500 அளிப்பதன் வழியாகப் பொறுப்பேற்கிறீர்கள்.
மரபுக் கவிதைப் பயிலரங்கத்தில் இணைந்து கொள்க
Copyright © 2021 தவ சஜிதரன் மொழியகம் - All Rights Reserved.
மனம் ~ ஒலி ~ மொழி ~ மொழியகம் ~ மொழியோகம்
We use cookies to analyze website traffic and optimize your website experience. By accepting our use of cookies, your data will be aggregated with all other user data.